Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் 2019: அயராது தமிழ்ப் பணியாற்றிய இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் 2019இல் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் 2019இல் இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

ஆழமான கருத்துகளை எளிமையான கவிதைகளின் மூலம் வெளிப்படுத்திவரும் கவிஞர் க.து.மு. இக்பால்,

ஊடகத் துறையிலும் சமூகப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் திரு. நா. ஆண்டியப்பன் இருவருக்கு- வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.

விருதுகள் மட்டுமின்றி தனித்துவத்துடன் தயாரிக்கப்பட்ட ஓவியங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

MES குழுமம், ஜோதிஸ்டோர் புஷ்பக் கடை, ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கின.

விருது நிகழ்ச்சி ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (8 நவம்பர்) நடைபெறுகிறது.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வெற்றியாளர்களுக்குத் திரு. விக்ரம் நாயர் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்