Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியில் விழுந்த மாதை பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகள் காப்பாற்றினர்

புக்கிட் பாத்தோக் பூங்காவில் உள்ள ஏரியில் தவறி விழுந்த மாதை 2 பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகள் இன்று காப்பாற்றினர்.

வாசிப்புநேரம் -
புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியில் விழுந்த மாதை பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகள் காப்பாற்றினர்

(படம்: Wong Woon Shin/ CNA)


புக்கிட் பாத்தோக் பூங்காவில் உள்ள ஏரியில் தவறி விழுந்த மாதை 2 பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகள் இன்று காப்பாற்றினர்.

திரு. சைமன் பிரூவின் (Simon Brewin), அவரது மனைவி திருமதி லெஸ்லி பிரூவின் (Lesley Brewin) இருவரும் ஒரு பெண் ஏரியில் தத்தளித்துக்கொண்டிருந்ததைக் கண்டனர்.

மரத்தின் கிளை ஒன்றைப் பிடித்துக்கொண்டிருந்த பெண்ணின் மூக்கும் வாயும் மட்டும் நீருக்கு வெளியே தென்பட்டன.

பெண்ணுக்கு உதவ திருமதி பிரூவின் வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். திரு. பிரூவின் ஏரிக்கு வெளியே இருந்தபடி பெண்ணைக் காப்பாற்ற முயன்றார்.

பின்னர் திருமதி பிரூவின் நீருக்குள் குதித்துப் பெண்ணை மீட்டார்.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அந்த இடத்திற்கு வந்துசேர்வதற்குள் அவர் முதலுதவி செய்து காப்பாற்றினார்.

சம்பவம் குறித்துக் குடிமைத் தற்காப்புப் படைக்குக் காலை சுமார் 11.45 மணிக்குத் தகவல் வந்தது.

மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக இங் டெங் ஃபொங் (Ng Teng Fong) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்