Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தீ மூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
லிட்டில் இந்தியாவில் தீ (காணொளி)

(படம்: 'செய்தி' நெயர் வஜிதா)


(வாசிப்பு நேரம்: 30 விநாடிகளுக்குள்)

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

14 டிக்சன் ரோட்டில் அந்தத் தீ மூண்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

குடிமைத் தற்காப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஜலான் புசார் நோக்கிச் செல்லும் வழியிலுள்ள ஓர் உணவகத்தில் பிற்பகல் சுமார் 2.50 மணிக்குத் தீ மூண்டதாக அவ்வட்டாரத்தில் வசிக்கும் செய்தி நேயர் திருமதி வஜிதா கூறியுள்ளார். 

தீ சற்றுத் தணிந்துள்ளதாகவும் தற்போது கரும்புகையும் புகை வாடையும் இருப்பதாகவும் அவர் கூறினார். 

அங்கு சாலைப் போக்குவரத்து வேறு சாலைகளுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்