லிட்டில் இந்தியாவில் இன்றிரவு பொங்கல் ஒளியூட்டு
லிட்டில் இந்தியா வட்டாரம் இன்றிரவு 7.50 மணியளவில் பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரம் இன்றிரவு 7.50 மணியளவில் பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ளது.
"அறுவடை" என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம் 11வது ஆண்டாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கலாசார, சமூக, இளையர் துறைக்கான அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ ஒளியூட்டைத் தொடங்கிவைக்கவுள்ளார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அலங்காரங்கள் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இருக்கும்.