COVID-19: நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவிகள்
கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சமாளிப்பதற்காக நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன.
கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சமாளிப்பதற்காக நிறுவனங்களுக்கு கூடுதல் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன.
அதிகத் தொகை பெறும் வகையில் பல்வேறு நிதி, கடனுதவித் திட்டங்களும், கடன் காப்புறுதிச் சந்தாவுக்குக் கூடுதல் மானியமும் வழங்கப்படும்.
சிறப்பாகச் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கான கடனுதவித் திட்டங்களும் வகுக்கப்படும். அது பற்றிய தகவல்களை சிங்கப்பூர் நாணய வாரியம் பின்னர் வெளியிடும்.
இதுபோன்ற திட்டங்கள் யாவும் மக்களுக்கு நிதி அடிப்படையில் உதவும் என்று துணையமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறினார்.
அது குறித்து அரசாங்கம் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும், கடனுதவி தொடர்பான விதிகளை சட்ட அமைச்சர் அடுத்த வாரம் வெளியிடுவார் என்றும் திரு ஹெங் கூறினார்.