வீட்டுக் கடன் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 10 பேர்மீது குற்றச்சாட்டு
வீட்டை விற்றவர்கள், சொத்து முகவர்கள், ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 10 பேர் மீது இன்று வழக்கு தொடரப்படவுள்ளது.
வீட்டை விற்றவர்கள், சொத்து முகவர்கள், ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 10 பேர் மீது இன்று வழக்கு தொடரப்படவுள்ளது.
வீடு வாங்குவதற்காகக் கடன் வழங்கும் திட்டங்களில் 11 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை அவர்கள் தவறாகக் கையாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவங்கள் 2014ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நேர்ந்தன.
சொத்துகளின் மதிப்பை வழக்கத்துக்கு மாறான முறையில் உயரச் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து கூடுதல் கடனைப் பெறச் சந்தேக நபர்கள் வகைசெய்ததாகச் சொல்லப்படுகிறது.
அதன் மூலம் cashback எனும் ரொக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான திட்டத்தில் கூடுதல் தொகையைப் பெற முயற்சி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.