கடன் முதலை துன்புறுத்தல் தொடர்பில் ஆடவர் கைது
கடன் முதலை துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் 50 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
கடன் முதலை துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் 50 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.
நேற்று புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6-இல் உள்ள வீடு ஒன்றின் கதவில் சிவப்பு நிறச் சாயம் தெளிக்கப்பட்டும் இரண்டு கடன் விவரக் குறிப்புகள் ஒட்டப்பட்டும் இருந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பக்கட்ட விசாரணையின் முடிவில் சந்தேக நபர் மேலும் சில கடன் முதலை துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆடவர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
கடன் முதலை துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு 5,000 முதல் 50,000 வரையிலான அபராதம், 5ஆண்டுகள் வரையிலான க்ட்டாயச் சிறைத் தண்டனையுடன் 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.