Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட மகேந்திரனுக்கு ஊழியர்களுக்கான தோழர் விருது

ஊழியர்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட மகேந்திரனுக்கு ஊழியர்களுக்கான தோழர் விருது 

வாசிப்புநேரம் -

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், 140க்கும் மேற்பட்ட தனிநபர்களையும் அமைப்புகளையும், இந்த ஆண்டு மே தின விருதளிப்பு நிகழ்ச்சியில் கௌரவித்துள்ளது.

அவர்களில் ஒருவரான திரு. மகேந்திரன் அடைக்கலம், தாம் ஆற்றிய சேவைகளுக்காக, ஊழியர்களுக்கான தோழர் விருதைப் பெற்றுள்ளார்.

இரசாயனத் தொழில்துறை ஊழியர் சங்கத்தில் திரு. மகேந்திரன் துணைத் தலைவராகச் சேவையாற்றி வருகிறார்.

ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வு, போனஸ், கூட்டு ஒப்பந்தங்களைப் புதுப்பித்தல் ஆகியவை குறித்து நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்