Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியைக் கிள்ளித் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு 4 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியைக் கிள்ளித் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு 4 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் அவதிப்பட்ட 67 வயது மாதை உடல் முழுவதும் கிள்ளினார் மியான்மாரைச் சேர்ந்த பணிப்பெண் லியான் கயின் (Lain Ngain).

மருத்துவமனையில் தங்கியிருந்த திருவாட்டி வீ கியூ ஹோயைப் (Wee Keu Hoi) பராமரிக்கும் பொறுப்பு பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தாம் துன்புறுத்தப்படுவதைத் திருவாட்டி வீ மகனிடம் கூறினார். கண்காணிப்புக் கேமராக்களில் பணிப்பெண் திருவாட்டி வீயைத் துன்புறுத்துவது தெரிந்தது.

மூதாட்டியின் உடலில் கிள்ளிய அடையாளங்களும் தென்பட்டன. ஜனவரி 2ஆம் தேதி பணிப்பெண்ணின் செயல்களைப் பற்றி புகார் கொடுக்கப்பட்டது.

திருவாட்டி வீ ஜனவரி 23ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக மாண்டார்.

வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் திருவாட்டி வீ அவதியுற்றதை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

வேண்டுமென்றே துன்புறுத்திய குற்றத்திற்காக பணிப்பெண்ணுக்கு அதிகபட்சமாக ஈராண்டு சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்