COVID-19: மலேசிய மாமன்னர், அரசி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
COVID-19: மலேசிய மாமன்னர், அரசி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
மலேசிய அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்குக் COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து மாமன்னரும் அரசியும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக இஸ்தான நெகாரா அறிக்கை வெளியிட்டது.
ஊழியர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களும் மருத்துவப் பரிசோதனை செய்து, தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.