கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்திய சந்தேக நபர் கைது
கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
நேற்று புக்கிட் மேரா லேனில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது சந்தேக நபர் பிடிபட்டார். அவர் அதிகாரிகளிடம் ஒத்துழைக்கவில்லை.
காவல் அதிகாரிகளை நோக்கி அவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். அதில் காவல் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கண்மூடித்தனமான செயலில் ஈடுபட்டுக் காயத்தை ஏற்படுத்தியதன் தொடர்பில் அவர் மீது நாளை குற்றம் சுமத்தப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையோ 5,000 வெள்ளி வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.