ரொட்டித் துண்டுக்குள் சிகெரட் பெட்டிகளை மறைத்து சிங்கப்பூருக்குள் கடத்தி வர முயன்ற ஆடவர் கைது
மலேசியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிளோட்டி ஒருவர் ரொட்டித் துண்டுக்குள் சிகெரட் பெட்டிகளை மறைத்து சிங்கப்பூருக்குள் கடத்திவர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
மலேசியாவைச் சேர்ந்த மோட்டர் சைக்கிளோட்டி ஒருவர் ரொட்டித் துண்டுக்குள் சிகெரட் பெட்டிகளை மறைத்து சிங்கப்பூருக்குள் கடத்திவர முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சாவடியில் சனிக்கிழமை நடந்த சோதனையில் அந்த ஆடவர் பிடிபட்டார்.
குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது Facebook பக்கத்தில் அதனைத் தெரிவித்தது.
38 வயதுடைய அந்த ஆடவர் தீர்வை செலுத்தப்படாத 7 சிகரெட் பெட்டிகளைக் கடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
5 சிகரெட் பெட்டிகளை ரொட்டிக்குள் வைத்தும், 1 சிகரெட் பெட்டியைத் தமது பையிலும்,1 சிகரெட் பெட்டியைத் தமது தலைக் கவசத்திற்கு உள்ளேயும் மறைத்து வைத்துக் கடத்த முயன்றார் அந்த ஆடவர்.