Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோதமாக நான்கிலக்க சீட்டைச் (4D) சேகரிக்கும் நடவடிக்கை - ஆடவர் கைது

சட்டவிரோதமாக நான்கிலக்க சீட்டைச் (4D) சேகரிக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 வயது சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

சட்டவிரோதமாக நான்கிலக்க சீட்டைச் (4D) சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 வயது சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நார்த் பிரிட்ஜ் ரோடு அருகே அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

கைது நடவடிக்கையில் 204 வெள்ளியும் ஒரு கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ஆடவர், சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆடவரின் குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது $200,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்