ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் தொடர்பில் 61 வயது ஆடவர் கைது
தோ பாயோவில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 61 வயது சந்தேக நபர் நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தோ பாயோவில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 61 வயது சந்தேக நபர் நேற்று (ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 27 வயதுப் பெண்ணை வழிமறித்து, கத்தியைக் காட்டி அந்த ஆடவர் கொள்ளையடித்ததாக நம்பப்படுகிறது.
அப்பெண்ணிடமிருந்து சுமார் 3,900 வெள்ளியும் தங்கச் சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இன்று (ஆகஸ்ட் 14) அந்த ஆடவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.
அவரின் குற்றம் நிரூபணமானால், அவருக்கு 2இலிருந்து 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.