மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக 6,800க்கும் அதிகமான மெல்லும் புகையிலைப் பொட்டலங்களைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக 6,800க்கும் அதிகமான மெல்லும் புகையிலைப் பொட்டலங்களைக் கடத்த முயன்ற மலேசிய ஆடவர் பிடிபட்டார்.
அந்த 35 வயது ஓட்டுநர் பதற்றத்துடன் காணப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது Facebook பதிவில் குறிப்பிட்டது.
அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் காரின் மாற்றியமைக்கப்பட்ட பகுதிகளில் அந்தப் பொட்டல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் விசாரித்து வருகிறது. கடத்தல் முயற்சிகளை முறியடிக்க பாதுகாப்புச் சோதனைகளை ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளும்.