Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கழிப்பறையில் சிறுவன்முன் ஆபாசமாக நடந்துகொண்ட ஆடவருக்கு அபராதம்

ரயில் நிலையக் கழிப்பறையில் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ரயில் நிலையக் கழிப்பறையில் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட குற்றத்தை 47 வயது ஸ்டென்லீ பாங் கொக் ஃபுய் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் 2018 ஆகஸ்ட் 21ஆம் தேதி உட்லண்ட்ஸ் MRT நிலையத்தில் நடந்தது.

கழிப்பறையைப் பயன்படுத்திக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவனின்முன் பாங் ஆபாச சைகைகளைச் செய்தார்.

சிறுவன் அதனை ரயில் நிலைய ஊழியர்களிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து பாங் கைதுசெய்யப்பட்டார்.

ஆபாசமான சைகைகளைச் செய்து மற்றவர்களைத் தொந்தரவு செய்ததற்காக பாங்கிற்கு மூன்று மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்