தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் சகோதரியை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை
தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் சகோதரியை மானபங்கம் செய்த ஆடவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் சகோதரியை மானபங்கம் செய்த ஆடவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 28 வயது ஆடவர், மானபங்கம் செய்த 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் 2 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
அவர் தன் மனைவியுடனும் அவருடைய குடும்பத்துடனும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவர் தன் மனைவியின் சகோதரியை மானபங்கம் செய்தார்.
அப்போது, அந்த 25 வயதுப் பெண் உறக்கத்தில் இருந்தார்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி, அவர் மீண்டும் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மானபங்கம் செய்தார்.
சந்தேகம் எழுந்து அந்தப் பெண், வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகிய காணொளியைச் சரிபார்த்தபோது தாம் மானபங்கம் செய்யப்பட்டது அவருக்குத் தெரிய வந்தது.
மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அவற்றில் எதுவும் விதிக்கப்பட்டிருக்கலாம்.