முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஆடவருக்குச் சிறை
இரு வெவ்வேறு குற்றங்களுக்காக 28 வயது ஆடவர் ஒருவருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
இரு வெவ்வேறு குற்றங்களுக்காக 28 வயது ஆடவர் ஒருவருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மீன் பண்ணையிலிருந்து திருக்கை மீனைத் திருடிய குற்றச்சாட்டும், முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டிய குற்றச்சாட்டும் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.
ஆடவர் 2017ஆம் ஆண்டு லிம் சூ காங்கில் உள்ள மீன் பண்ணை ஒன்றில் இருந்து 250 வெள்ளி மதிப்புடைய திருக்கை மீனைத் திருடியிருக்கிறார்.
பின் 2018ஆம் ஆண்டு அந்த ஆடவர் தனது முன்னாள் காதலியின் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார்.
ஆடவர் மீது திருட்டு, மிரட்டல் ஆகிய இரு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.