Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தங்கையின் தோழியை மானபங்கம் செய்ததற்காக ஆடவருக்கு 18 மாதச் சிறை

இளம் ஆடவர் ஒருவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது தங்கையின் தோழியை மானபங்கம் செய்ததற்காக அவருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தங்கையின் தோழியை மானபங்கம் செய்ததற்காக ஆடவருக்கு 18 மாதச் சிறை

(படம்: Reuters)

இளம் ஆடவர் ஒருவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது தங்கையின் தோழியை மானபங்கம் செய்ததற்காக அவருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்க, குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

2016ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி அந்த ஆடவர் தனது 25ஆவது பிறந்தநாளை ஒரு தங்கும் விடுதியில் கொண்டாடினார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 23 வயதுப் பெண்ணும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

போதைக்கு ஆளான அப்பெண்ணை அந்த இளம் ஆடவர் ஓர் அறையில் மானபங்கம் செய்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த போது அந்த ஆடவரின் தந்தையும் உடன்பிறப்புகளும் அதே அறையில் உறங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்