மார்ச் பள்ளி விடுமுறையில் வெளிநாடு செல்லும் சிங்கப்பூரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்
மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளனர்.
தாங்கள் பயணம் செல்லும் நாடுகளின் உள்ளூர்ச் சட்டங்களை அவர்கள் அறிந்திருப்பது அவசியம் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
மலேசியாவிற்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் சோதனைச் சாவடியில் தங்களின் கடப்பிதழை மலேசியக் குடிநுழைவு அதிகாரியிடம் கொடுத்து அதில் சரியாக முத்திரை பதிவு செய்யப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் செல்வோர் வெளியுறவு அமைச்சின் இணையப் பக்கத்தில் பதிவுசெய்யுமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.