Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மரினா பே உல்லாசப் படகு நிலையத்தில் செயற்கைக் கூரையும் மின்விளக்குகளும் கீழே விழுந்தன

மரினா பே உல்லாசப் படகு நிலையத்தில் செயற்கைக் கூரையும் மின்விளக்குகளும் நேற்றுக் காலை பெயர்ந்து விழுந்தன.

வாசிப்புநேரம் -
மரினா பே உல்லாசப் படகு நிலையத்தில் செயற்கைக் கூரையும் மின்விளக்குகளும் கீழே விழுந்தன

(படம்: Cynthia Choo)

மரினா பே உல்லாசப் படகு நிலையத்தில் செயற்கைக் கூரையும் மின்விளக்குகளும் நேற்றுக் காலை பெயர்ந்து விழுந்தன.

மரினா அணைக்கட்டில் நடைபெற்ற சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமான சாகசக் காட்சி நடைபெற்ற பிறகு கூரைப் பகுதியும் மின்விளக்குகளும் கீழே விழுந்தன.

சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஐம்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் முயற்சியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சம்பவத்தை உறுதிசெய்த உல்லாசப் படகு நிலையம் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தது.

நிலையத்தின் புறப்பாட்டு இடத்திலும் கார் நிறுத்துமிடத்திலும் கூரை கீழே விழுந்தது.

பழுதான செயற்கைக் கூரைப் பகுதிகளை அகற்றிவிட்டதாக நிலையம் கூறியது. எனினும் கூரையை முழுமையாகச் சரிசெய்ய நேரமாகும் என்று அது தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்