கடல்சார்ந்த தொழில்துறையில் மற்ற நாடுகளுக்கு உதவியை அதிகரிக்கவுள்ள சிங்கப்பூர்
கடல்சார்ந்த தொழில்துறையில் மற்ற நாடுகளுக்கு வளர்ச்சி உதவியை சிங்கப்பூர் அதிகரிக்கவிருக்கிறது.
கடல்சார்ந்த தொழில்துறையில் மற்ற நாடுகளுக்கு வளர்ச்சி உதவியை சிங்கப்பூர் அதிகரிக்கவிருக்கிறது.
அதற்கான மேம்பட்ட 5 வருடத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பயிற்சித் திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.
அனைத்துலகக் கடல்துறை அமைப்பின் கீழ் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் திட்டம் உதவும்.
6.5 மில்லியன் வெள்ளி மதிப்புக்கொண்ட அந்தத் திட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் இன்று தொடங்கி வைத்தார்.
சிங்கப்பூர்க் கடல்துறையின் திறன் வளர்ச்சியை மேம்படுத்தவும் மனிதவளத்தை அதிகரிக்கவும் புதிய திட்டம் வகை செய்யும்.