18 மாதங்களில் அபராதங்கள் வழி $17 மில்லியன் பெற்றுள்ள சிங்கப்பூர் நாணய வாரியம்
2017 ஜூலை மாதம் தொடங்கி 18 மாதக் காலக்கட்டத்தில், அபராதங்கள் வழி சிங்கப்பூர் நாணய வாரியம் 17 மில்லியன் வெள்ளி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
2017 ஜூலை மாதம் தொடங்கி 18 மாதக் காலக்கட்டத்தில், அபராதங்கள் வழி சிங்கப்பூர் நாணய வாரியம் 17 மில்லியன் வெள்ளி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஒரு குற்றவியல் தண்டனையும் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இரண்டு உள்வர்த்தக விவகாரங்கள் தொடர்பில் ஆணையம் கிட்டத்தட்ட 700,000 வெள்ளி அபராதம் விதித்தது.
தான் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்பான முதல் அறிக்கையில் ஆணையம் அந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டது.
மேலும் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும், சந்தையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தான் மேற்கொண்டுள்ள முக்கிய முயற்சிகள் பற்றியும் அது விவரித்தது.