Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பஞ்சாயத்து வழக்குகளைக் கையாளும் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம்

சிங்கப்பூரில், பஞ்சாயத்துத் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காகப் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மேக்ஸ் வெல் சாம்பர்ஸில் (Maxwell Chambers) திறக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
பஞ்சாயத்து வழக்குகளைக் கையாளும் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம்

(கோப்புப் படம்: AFP/Roslan RAHMAN)

சிங்கப்பூரில், பஞ்சாயத்துத் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காகப் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மேக்ஸ் வெல் சாம்பர்ஸில் (Maxwell Chambers) திறக்கப்படவுள்ளது.

தற்போதிருப்பதைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமான வழக்குகளை அங்கு கையாள முடியும்.

அனைத்துலக நடுவம் எனும் சிங்கப்பூரின் மதிப்பை அது மேலும் உயர்த்தும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

பசிஃபிக் நாடுகளின் வழக்குரைஞர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

அலுவலகம் விரிவுபடுத்தப்படுவதால், புதிய வசதிகளை இணைக்க முடியும்;

அதன் மூலம், ஆசியான் வட்டார நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட சிங்கப்பூர் சிறந்த தளமாக அமையும்;

இந்த வட்டாரம் வளர்ச்சி கண்டுவருவதால், பல பஞ்சாயத்து வழக்குகள் எழும் சாத்தியம் இருப்பதாகக் கூறினார் அமைச்சர்.

அத்தகைய வழக்குகளைக் கையாள்வதற்கு சிங்கப்பூர் நடுநிலையான, சிறந்த இடம் என்றும் திரு. சண்முகம் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்