Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவுக்குப் புதிய தலைவர்

மீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவின் புதிய தலைவராக சபநிதா சண்முகசுந்தரம் (Sabanitha Shanmugasundram) பொறுப்பேற்கவுள்ளார். அந்தப் பிரிவின் கீழ் வசந்தம் ஒளவழியும் ஒலி 96.8உம் செயல்படுகின்றன.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவின் புதிய தலைவராக சபநிதா சண்முகசுந்தரம் (Sabanitha Shanmugasundram) பொறுப்பேற்கவுள்ளார். அந்தப் பிரிவின் கீழ் வசந்தம் ஒளிவழியும் ஒலி 96.8உம் செயல்படுகின்றன.

25 ஆண்டுகள் ஊடகத் துறையில் பணிபுரிந்த அனுபவம் திருவாட்டி சபநிதாவுக்கு உண்டு.

அவர் ஏற்கனவே 2006இலிருந்து 2013 வரை மீடியாகார்ப் நிறுவனத்தில் வசந்தம் ஒளிவழியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

இந்திய ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, மேலும் தரமான படைப்புகளை வழங்கும் நிறுவனத்தின் முயற்சிகளைத்  திருவாட்டி. சபநிதா வழிநடத்துவார்.

காணொளி, ஒலி, மின்னிலக்கத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு உத்திகள்மூலம் இந்தியப் படைப்புகளை மெருகேற்றுவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.

திருவாட்டி சபநிதாவின் பொறுப்பு உடனடியாக நடப்புக்கு வருகிறது. மீடியாகார்ப் நிறுவனம் அதன் நிர்வாகப் பொறுப்புகளில் மேலுமொரு மாற்றத்தையும் அறிவித்தது. 

மீடியாகார்ப் பயனீட்டாளர் விளம்பரப் பிரிவுத் தலைவராகிறார் திரு. ஆலிவர் சோங் (Oliver Chong).

திரு. ஆலிவர் அடுத்த மாதம் முதல் தேதி (ஆகஸ்ட் 1) பொறுப்பேற்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்