Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கரையோரப் பூந்தோட்டத்தில் மீடியாகார்ப் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சி

தேசிய தினத்தை ஒட்டி, மீடியாகார்ப் நிறுவனம், கரையோரப் பூந்தோட்டத்துடன் இணைந்து முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாசிப்புநேரம் -

தேசிய தினத்தை ஒட்டி, மீடியாகார்ப் நிறுவனம், கரையோரப் பூந்தோட்டத்துடன் இணைந்து முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இருநாட்களுக்கு நடத்தப்பட்ட இலவச இசை நிகழ்ச்சியில் சுமார் 60,000 பேர் கலந்துகொண்டனர்.

'எங்கள் சிங்கப்பூர், எங்கள் கொண்டாட்டம்' என்பது இசை நிகழ்ச்சியின் கருப்பொருள்.

கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள 'The Meadow' என்னும் இடத்தில் இசை நிகழ்ச்சி அரங்கேறியது.

இரு சிங்கப்பூர் நிறுவனங்கள், சிங்கப்பூரர்களுக்கு அளிக்கும் தேசிய தினப் பரிசு இந்தக் கலைநிகழ்ச்சி என்று மீடியாகார்ப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தம் லோக் கெங் குறிப்பிட்டார்.

அனைத்து சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைத்து, தேசத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவது நிகழ்ச்சியின் நோக்கம்.

இசை நிகழ்ச்சியுடன், சில கேளிக்கை நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்