மெர்லயன் பார்க்கில் உள்ள மெர்லயன் சிலை நாளையிலிருந்து 3 நாளுக்கு மூடப்படும்
மெர்லயன் பூங்காவில் உள்ள மெர்லயன் சிலை, நாளையிலிருந்து வரும் சனிக்கிழமைவரை மூடப்படவிருக்கிறது.
மெர்லயன் பூங்காவில் உள்ள மெர்லயன் சிலை, நாளையிலிருந்து வரும் சனிக்கிழமைவரை மூடப்படவிருக்கிறது.
அதில் பராமரிப்புச் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
அத்தகையச் சோதனைகள் இடம்பெறும் வேளையில், பொதுமக்கள் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கழகம் தெரிவித்தது.
இதற்கு முன்னர் சென்ற மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை துப்புரவு, மேம்பாட்டுப் பணிகளுக்காக மெர்லயன் சிலை மூடப்பட்டிருந்தது.