Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இராணுவ நாய்கள் என்ன செய்கின்றன? தெரிந்துகொள்ள மக்களுக்குக் கிடைத்த வாய்ப்பு

இராணுவ நாய்கள் என்ன செய்கின்றன? தெரிந்துகொள்ள மக்களுக்கு வாய்ப்பு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் இராணுவத்தில் உள்ள நாய்கள் எவ்வளவு அறிவார்ந்தவை? தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது பொங்கோல் குடியிருப்பாளர்களுக்கு!

சிங்கப்பூர் ஆயுதப் படையின் பொன்விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வீடமைப்புப் பேட்டைகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்றது இராணுவ நாய்களின் அறிவுத் திறனை மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த நிகழ்ச்சி.

ஆகாயப் படைத்தளங்களைப் பாதுகாப்பதில் இந்த நாய்கள் பெரும்பங்கு வகிப்பதாய்த் தெரிவிக்கப்பட்டது.

அத்துமீறிச் செல்வோரை நாய்கள் துரிதமாகச் செயல்பட்டு எவ்வாறு துரத்திப் பிடிக்கின்றன, பைகளில் உள்ள வெடிப்பொருட்களை அவை தங்கள் நுகரும் திறனால் எப்படிக் கண்டறிகின்றன போன்றவற்றை மக்கள் தெரிந்துகொள்ள நிகழ்ச்சி வாய்ப்பளித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்