தற்காப்பு அமைச்சின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த, 2 புதிய இணைய நிபுணத்துவத் திட்டங்கள் அறிமுகம்
தற்காப்பு அமைச்சு, தனது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக, இரண்டு புதிய இணைய நிபுணத்துவத் திட்டங்கள் பற்றி அறிவித்திருக்கிறது.
தற்காப்பு அமைச்சு, தனது இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக, இரண்டு புதிய இணைய நிபுணத்துவத் திட்டங்கள் பற்றி அறிவித்திருக்கிறது.
புதிய இணையத் தற்காப்புப் பள்ளி ஒன்றையும் அது அறிமுகம் செய்துள்ளது.
நிபுணத்துவத் திட்டங்களில் ஒன்று, இராணுவத் துருப்பினருக்கானது.
மற்றொன்று, சீருடையில் இல்லாத நிபுணர்களுக்கானது.
அவர்களுக்கான பயிற்சியில் ஒருபகுதி, புதிய இணையத் தற்காப்புப் பள்ளியில் இடம்பெறும்.
தற்காப்பு அமைச்சு முழுமைக்குமான, இணையத் தற்காப்புப் பயிற்சிக்கும் கல்விக்கும் உரிய நிலையமாகப் புதிய பள்ளி செயல்படும்.
முழுமைத் தற்காப்பின் ஆறாவது தூணாக, மின்னிலக்கத் தற்காப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, தற்காப்பு அமைச்சு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
தற்காப்புக்கான மூத்த துணையமைச்சர் ஹெங் சீ ஹாவ் (Heng Chee How), இன்று Stagmont முகாமிலுள்ள இணையத் தற்காப்புச் சோதனை நிலையத்துக்கு வருகை மேற்கொண்ட நிலையில், புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.