சமூகத்தில் இனம் குறித்து மேலும் சிறப்பாகக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்க 3 வழிகள் - அமைச்சர் ஈஸ்வரன்
சமூகத்தில் இனம் குறித்து மேலும் சிறப்பாகக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்க 3 வழிகள் - அமைச்சர் ஈஸ்வரன்
சமூகத்தில் இனம் குறித்து மேலும் சிறப்பாகக் கலந்துரையாடுவதை ஊக்குவிக்க, போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரன் 3 வழிகளை முன்வைத்துள்ளார்.
வெவ்வேறு கண்ணோட்டங்களை மதிக்கக் கற்றுக்கொள்வதும் அவற்றில் அடங்கும்.
சமூக சேவை அமைப்பான ஜாமியா (Jamiyah) நடத்திய இன நல்லிணக்கக் கருத்தரங்கில் இணையம்வழி கலந்துகொண்டு அவர் அது பற்றி விவரித்தார்.
இனவாத நடத்தைக்கு எதிராக மக்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றார் திரு. ஈஸ்வரன்.
சமூக விழுமியங்கள், வார்த்தைகளிலும் செயல்களிலும் பிரதிபலிக்கப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார்.
அதோடு, சிலரின் நடத்தையை வைத்து அனைவரையும் மதிப்பிடக்கூடாது என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் இந்த அளவு வளர்வதற்கு, ஒவ்வொரு சமூகமும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டிருப்பதை அவர் சுட்டினார்.
நேர்மையான, ஆக்ககரமான உரையாடலில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றித் திரு. ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
சமூகத் தலைவர்களும் அமைப்புகளும் பலதரப்பட்ட குழுக்களிடையே உறவுகளை வளர்ப்பதன் மூலம் வழிகாட்டவேண்டும் என்றார் திரு. ஈஸ்வரன்.
இருதரப்பு நம்பிக்கையையும் மரியாதையையும் வலுப்படுத்தும் நோக்கில், வெவ்வேறு தலைமுறையினர் இடையே உரையாடல் நடைபெறவேண்டும் என்றும் அவர் சொன்னார்.