சமூக அளவில் கிருமிப்பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் இன்னும் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைள்
சமூக அளவில் கிருமிப்பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் இன்னும் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைள்
சமூக அளவிலான கிருமிப்பரவல், சென்ற வாரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பள்ளிகள் இன்னும் கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளன.
பள்ளி மாணவர்கள், ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க, இப்போது எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதி அதுவென்று, கல்வி அமைச்சு தெரிவித்தது.
இன்றிலிருந்து அந்தக் கட்டுப்பாடுகள் நடப்புக்குவந்தன. உடற்பயிற்சிப் பாடம், வகுப்பு அடிப்படையில் நடைபெறுவதோடு, குழு நடவடிக்கைகளில் இருவர் மட்டுமே ஈடுபடலாம்.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றுக்கான நேரடி இணைப்பாட நடவடிக்கைகள், வழக்கம்போல் தொடரும்.
ஆனால், தொடக்கப் பள்ளிகளுக்கான நேரடி நடவடிக்கைகளை, அடுத்தவாரத்திலிருந்து தொடங்க, கல்வி அமைச்சு திட்டமிடுகிறது.
இதற்கிடையே, விளையாட்டு, நடன வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 50-இல் இருந்து 30-ஆகக் குறைக்கப்படும்.
குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 5-இல் இருந்து 2-ஆகக் குறைக்கப்படும்.
மாணவர்கள் அல்லது பள்ளி ஊழியர்களின்
குடும்பத்தார், சுகாதார அமைச்சின் சுகாதார ஆபத்து எச்சரிக்கைக் குறுஞ்செய்தியைப் பெற்றால், மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.