8 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை
பக்கத்து வீட்டில் வசித்த 8 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு நான்கு ஆண்டுச் சிறைத்தண்டனையும் 9 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
பக்கத்து வீட்டில் வசித்த 8 வயதுச் சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு நான்கு ஆண்டுச் சிறைத்தண்டனையும் 9 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அந்த 47 வயது ஆடவர் 2017இல் இரண்டு முறை சிறுமியை மானபங்கம் செய்திருக்கிறார்.
அதோடு அந்தச் சிறுமியிடம் குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொளிகளையும் காண்பித்திருக்கிறார் ஆடவர்.
ஆடவர் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக அவருடைய தண்டனைக் காலம் இரண்டு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனைவி செலுத்திய 100,000 வெள்ளி பிணையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.