Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

12 வயதுத் தங்கையை மானபங்கம் செய்ததாக ஒப்புக்கொண்ட இளையர்

12 வயதுத் தங்கையை மானபங்கம் செய்ததையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதையும் 18 வயது இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

12 வயதுத் தங்கையை மானபங்கம் செய்ததையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதையும் 18 வயது இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தான் கேட்பதற்கு இணங்கினால் பிரபலக் கொரியப் பாடல்களான K-pop பொருள்களை வாங்கித் தருவதாக ஆசைகாட்டியிருக்கிறார் இளையர்.

இவ்வாண்டு ஜனவரியில் இளையரின் துன்புறுத்தல் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அண்ணனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த தங்கை, காவல்துறையில் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்டது.

தங்கையை மானபங்கம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் 16 வயதிற்குட்பட்டவரைப் பாலியல் நடவடிக்கைக்கு உட்படுத்த முயன்ற ஒரு குற்றச்சாட்டையும் இளையர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இளையரின் தண்டனை டிசம்பர் 10 அன்று நிர்ணயிக்கப்படும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்