ஆட்குறைப்பு எண்ணிக்கை குறைந்திருக்கிறது: மனிதவள அமைச்சு
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் முற்பாதிக்கான ஊழியர் சந்தை குறித்த அறிக்கையில் வேலைச் சந்தை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
அமைச்சு வெளியிட்ட அறிக்கையின் முக்கிய விவரங்கள்:
-வேலையில் இருந்தோர் எண்ணிக்கை, இவ்வாண்டின் முற்பாதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.
- உலகப் பொருளியல் நிச்சயமற்றதாக இருக்கும் வேளையில், புதிய வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்தது.
- ஆட்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்தது.
- பெரும்பாலான நிறுவனங்கள், வேலையில் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவில்லை.
- வேலைக்கு ஆள்சேர்ப்பதில் நிறுவனங்கள் கவனமாகச் செயல்படுகின்றன.