ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை முதலாளிகள் தொடரச் செய்ய வேண்டும்: மனிதவள அமைச்சு
ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை முதலாளிகள் தொடரச் செய்ய வேண்டும்: மனிதவள அமைச்சு
சிங்கப்பூர் முதலாளிகள், தங்கள் ஊழியர்களை இயன்றவரை வீட்டிலிருந்தே வேலை செய்வதைத் தொடரச் செய்ய வேண்டுமென மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 2ஆம் தேதி, அதிரடித் திட்டம் தளர்த்தப்பட்டாலும் அந்த நடைமுறையை முதலாளிகள் தொடரவேண்டும்.
மனிதவள அமைச்சு அதுகுறித்துச் சோதனைகள் நடத்தப்படுமெனக் குறிப்பிட்டது.
ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வாய்ப்பு இருந்தும் அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், வர்த்தகங்கள் மூடப்படலாமென அமைச்சு தெரிவித்தது.
பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றாமற்போனாலும் வர்த்தகங்கள் மூடப்படலாம். வேலையிடத்தில், ஊழியர்கள் ஒன்றுகூடுவதும் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்தது.