சிங்கப்பூருக்குள் பணம் கொண்டுவருவது - விதிமுறைகள்
குடிநுழைவு அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் வரம்புக்கு மிஞ்சிய ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.
குடிநுழைவு அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்காமல் வரம்புக்கு மிஞ்சிய ரொக்கத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.
முதலில், முறையாகத் தெரிவிப்பது என்றால் என்ன? ரொக்கம் கொண்டுவருவதை ஏன் தெரிவிக்கவேண்டும்?
-ஒருவர் சிங்கப்பூரை விட்டுச் செல்லும்போதும் சிங்கப்பூருக்குள் வரும்போதும், 20,000 வெள்ளிக்கு மேல் ரொக்கம் வைத்திருந்தால், உரிய அதிகாரிகளிடம் முறையாகத் தெரிவிக்க வேண்டும்.
-ஒருவர் வெளிநாட்டு நாணயத்தில் 20,000 வெள்ளிக்கு நிகரான தொகைக்கு மேல் வைத்திருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.
-நபர்கள் தங்களிடம் இருக்கும் ரொக்கத்தை NP727, Bearer Negotiable Instruments Report எனும் ஆவணங்களில் பதிவு செய்யவேண்டும்.
-ஆவணங்கள் அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் காவல் நிலையங்களிலும் கிடைக்கும். காவல்துறையின் இணையவாசல் மூலமாகவும் அதனைப் பெறலாம்.
-அவற்றைப் பின்னர் குடிநுழைவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.
-இந்தச் சட்டத்தின் வழியாக அதிகாரிகள் பணக் கடத்தல், பணமோசடிச் சம்பவங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலும்.