குரங்கம்மைத் தொற்று - நோயாளி தங்கிய ஹோட்டலின் 4 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
சிங்கப்பூரில் குரங்கம்மை தொற்றியவர் தங்கியிருந்த கேலாங்கின் Hotel 81 Orchid ஹோட்டலின் 4 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோட்டல் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் குரங்கம்மை தொற்றியவர் தங்கியிருந்த கேலாங்கின் Hotel 81 Orchid ஹோட்டலின் 4 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோட்டல் பேச்சாளர் தெரிவித்தார்.
குரங்கம்மை தொற்றியவர் தங்கியிருந்த அறையில் கிருமிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி, நைஜீரியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 38 வயது ஆடவருக்குக் குரங்கம்மை இருப்பது மே 9ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நோயாளியுடன் தொடர்பில் இருந்த 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஐவர் சிங்கப்பூர்வாசிகள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
பிரிட்டன், இந்தியா, மலேசியா, அயர்லந்து, நைஜீரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அரிய நோய் குரங்கம்மை.