புதிய கடல்சார் இணையப் பாதுகாப்பு நிலையம்
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள புதிய முழுநேர இணையப் பாதுகாப்பு நிலையத்தை நிறுவவுள்ளது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள புதிய முழுநேர இணையப் பாதுகாப்பு நிலையத்தை நிறுவவுள்ளது. இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் அது அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய கடல்சார் இணையப் பாதுகாப்பு நிலையம் உத்தேச இணையத் தாக்குதல்களை இன்னும் எளிதாகக் கையாளும். முன்கூட்டியே கண்டறிதல், கண்காணித்தல், பகுப்பாய்வு ஆகிய நடவடிக்கைகளைப் புதிய நிலையத்தில் மேற்கொள்ள இயலும்.
முக்கியத் தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.