Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லாவ் 3 வாரங்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லாவ் 3 வாரங்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

வாசிப்புநேரம் -

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லாவ் தியா கியாங் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார்.

அந்த தகவலை அவரது கட்சி Facebook பதிவின் மூலம் வெளியிட்டது.

திரு. லாவ் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி தமது வீட்டில் கீழே விழுந்ததை அடுத்து Khoo Teck Puat பொது மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

அதன் பிறகு பொது வார்டுக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

திரு. லாவ் தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்குத் திரு. லாவ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

திரு. லாவ் 1991ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்