Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தரைவழிச் சிறப்புப் பயண ஏற்பாட்டை முன்னிட்டு, மலேசியப் பிரதமர் நாளை சிங்கப்பூருக்கு வருகை புரிவார்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழிச் சிறப்புப் பயண ஏற்பாட்டின் தொடக்கத்தைக் காண, மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சிங்கப்பூருக்கு நாளை வருகை புரிவார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழிச் சிறப்புப் பயண ஏற்பாட்டின் தொடக்கத்தைக் காண, மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சிங்கப்பூருக்கு நாளை வருகை புரிவார்.

இரு நாடுகளையும் இணைக்கும் ஜொகூர் பாலத்தில் சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங்குடன் திரு இஸ்மாயில் சப்ரியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மலேசியப் பிரதமர் நாளை சிங்கப்பூருக்கு வரவுள்ளார்.

இருதரப்பு, வட்டாரத் தொடர்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கியப் படியாக சிறப்புப் பயண ஏற்பாட்டின் தொடக்கம் அமைந்துள்ளது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.

பயண ஏற்பாட்டின் தொடக்கத்திற்குப் பின்னர் மலேசியப் பிரதமர் இஸ்தானாவில் அதிபர் ஹலிமா யாக்கோபையும் பிரதமர் லீயையும் சந்திப்பார்.

திரு சப்ரியைக் கௌரவிக்கும் வகையில் புதிய கலப்பின ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்