Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடலோடிகளுக்கும், கடல்துறை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் சுவரோவியங்கள்

கடலோடிகளுக்கும், கடல்துறை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சுவரோவியங்கள் சில வரையப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

கடலோடிகளுக்கும், கடல்துறை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், சுவரோவியங்கள் சில வரையப்பட்டுள்ளன.

COVID-19 நோய்த்தொற்று சிங்கப்பூரை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தபோது, பல முன்னிலை ஊழியர்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்றனர்.

அவர்களில் கடலோடிகளும், கடல்துறை ஊழியர்களும் அடங்குவர்.

அனைத்துலக வர்த்தகமும், விநியோகமும் தடைபடாமல் இருக்க அவர்களது சேவை அவசியமானது.

அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாசிர் பாஞ்சாங் முனையத்திலும் ஜூரோங் துறைமுகத்திலும் இரண்டு சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அவற்றுக்கு, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம், PSA நிறுவனம், ஜூரோங் துறைமுகம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.

இரண்டு துறைமுகங்களில் உள்ள வெவ்வேறு உள்கட்டமைப்புகளையும் அங்கங்களையும் பிரதிபலிக்கும் வகையில் சுவரோவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்க் கலைஞர் ஜேக்ஸ்ட்டன் சுவின் (Jaxton Su) குழுவால் வரையப்பட்ட சுவரோவியத்திற்கு, PSA, ஜூரோங் துறைமுக ஊழியர்களும் சற்றுப் பங்களித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்