Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: 3 சந்தேக நபர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 31 வயது ஆடவர் சதீஷ் நொயல் கோபிதாஸ் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை: 3 சந்தேக நபர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன

படம்: 8world News/Cai Youxia

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் 31 வயது ஆடவர் சதீஷ் நொயல் கோபிதாஸ் கொலை செய்யப்பட்டதன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களில் மூவர்மீதான குற்றச்சாட்டுகளின் கடுமை குறைக்கப்பட்டது.22 வயது டான் ஹோங் ஷெங் (Tan Hong Sheng), 26 வயது சான் ஜியா ஷிங் (Chan Jia Xing) , 25 வயது லூ பூன் சோங் (Loo Boon Chong) ஆகியோர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள் மீட்டுக் கொள்ளப்பட்டன.

ஆனால், பொது இடத்தில் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தததாகவும், ஆயுதம் வைத்திருந்த நபருக்குத் துணைபோனதாகவும் அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை சதீஷ் கொலைசெய்யப்பட்டார்.

அதன் தொடர்பில் மேலும் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்