அங் மோ கியோவில் 'மஷ்ரூம்' போதைப்பொருள்கள் பறிமுதல்
அங் மோ கியோவில் 'மஷ்ரூம்' போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங் மோ கியோவில் 'மஷ்ரூம்' போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் தொடர்பில் இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த 34 வயது ஆடவர் ஒருவர் அங் மோ கியோ அவென்யூ 3-இல் பிடிபட்டதாகவும், அவரிடம் சிலவகை போதைப் பொருள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
சிறது நேரத்தில் அந்த இடத்திலேயே 58 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார்.
ஆடவர்களின் இருப்பிடத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் அங்கு மேலும் போதைப்பொருள்களைக் கண்டுபிடித்தனர்.
விசாரணை தொடர்கிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்குக் குறைந்தது 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 5 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.