Mustafa கடைத்தொகுதி கிருமிப்பரவலால் மூடப்படவில்லை - வழக்கம்போல் இயங்குகிறது
முஸ்தஃபா (Mustafa) கடைத்தொகுதி, கிருமிப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளதாய் Whatsappஇல் பரவிவரும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்தஃபா (Mustafa) கடைத்தொகுதி, கிருமிப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளதாய் Whatsappஇல் பரவிவரும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரை 'செய்தி' தொடர்புகொண்டது.
அதன் செயல்பாடுகள் வழக்கம்போல் தொடர்வதாகவும், மாற்றங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்பு முஸ்தஃபா கடைத்தொகுதி 24 மணி நேரம் செயல்பட்டு வந்தது.
ஆனால், கிருமித்தொற்றுச் சூழலால், அது திறந்திருக்கும் நேரம் சென்ற ஆண்டு குறைக்கப்பட்டது.
தற்போது, அது காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இயங்கி வருகிறது.