புதுப்பிப்புப் பணிகளுக்காக உதவிநிதி பெறும் தேசிய நினைவுச் சின்னங்கள் எவை?
தேசிய மரபுடைமைக் கழகம், இந்த ஆண்டு 15 தேசிய நினைவுச் சின்னங்களின் புதுப்பிப்பு, பராமரிப்புப் பணிகளுக்காக 2.6 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை வழங்கவிருக்கிறது.
தேசிய மரபுடைமைக் கழகம், இந்த ஆண்டு 15 தேசிய நினைவுச் சின்னங்களின் புதுப்பிப்பு, பராமரிப்புப் பணிகளுக்காக 2.6 மில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை வழங்கவிருக்கிறது.
செயின்ட் ஆண்டுரூஸ் (St Andrew's) தேவாலயம்,
தியேன் ஹோக் கேங் (Thian Hock Keng) கோயில்,
நேட்டிவிட்டி ஒஃப் தி பிலச்சட் விர்ஜின் மேரி (Nativity of the Blessed Virgin Mary) தேவாலயம்,
சேசட்-எல் (Chesed-El) யூத வழிபாட்டுத் தலம்,
மக்ஹேன் அபோத் (Maghain Aboth) யூத வழிபாட்டுத் தலம் போன்றவை முதன்முறையாக அதற்குத் தகுதிபெற்றுள்ளன.
தேசிய நினைவுச் சின்னங்கள் அறநிதி மூலம் அவற்றுக்கான தொகை பிரித்து வழங்கப்படும்.
தேசிய நினைவுச் சின்னங்களுக்கு 2.5 மில்லியன் வெள்ளி புதுப்பிப்புப் பணிகளுக்கான துணை நிதியாகவும், 115,000 வெள்ளி பராமரிப்புக்கான துணை நிதியாகவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.