இணையப் பாதுகாப்பு தொடர்பான பட்டக்கல்விக்கு இனி தேசிய சேவைக்குச் செல்லவிருப்போர் விண்ணப்பிக்கலாம்
தேசிய சேவைக்குச் செல்லவிருப்போர் இணையப் பாதுகாப்பு தொடர்பான பட்டக்கல்வியை மேற்கொள்ள இனி விண்ணப்பிக்கலாம்.
தேசிய சேவைக்குச் செல்லவிருப்போர் இணையப் பாதுகாப்பு தொடர்பான பட்டக்கல்வியை மேற்கொள்ள இனி விண்ணப்பிக்கலாம்.
தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து அதனை வழங்குகின்றன.
தற்காப்பு அமைச்சு இதற்கு முன் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இத்தகைய பங்காளித்துவத்தில் ஈடுபட்டது.
ராணுவத்தில் இணையப் பாதுகாப்பு நிபுணராக விரும்புவோர் மூன்றிலிருந்து நான்கு ஆண்டு வரை பயிற்சிக்குச் செல்லவேண்டும்.
அதில் கிடைக்கும் தேர்ச்சிகளைக் கொண்டு அவர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொள்ளலாம்.
அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு அவர்கள் வேலை செய்துகொண்டே பயிற்சிபெறும் திட்டத்தைத் தொடங்குவர்.