Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தினக் கொண்டாட்டம் : 2 வெவ்வேறு இடங்களில் வான்குடை சாகசம்

தேசிய தினக் கொண்டாட்டம் : 2 வெவ்வேறு இடங்களில் வான்குடை சாகசம்

வாசிப்புநேரம் -
தேசிய தினக் கொண்டாட்டம் : 2 வெவ்வேறு இடங்களில் வான்குடை சாகசம்

(படம்: Xabryna Kek)

இவ்வாண்டு தேசிய தினத்தன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் 2 வெவ்வேறு இடங்களில் வான்குடை சாகசம் இடம்பெறவிருக்கிறது.

சிவப்புச் சிங்கங்கள் அணியிலிருந்து 12 வீரர்கள் அந்த சாகசத்தில் ஈடுபடுவர்.

தேசிய தின அணிவகுப்பில் மக்களை அதிகம் கவரும் அம்சங்களில் ஒன்று வான்குடை சாகசம்.

ஜூரோங், செங்காங் ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டின் வான்குடை சாகசத்தை நேரில் கண்டு ரசிக்கலாம்.

வீரர்கள் சுமார் ஐயாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து தரையிறங்ககுவர்.

சாகசத்துக்கான ஒத்திகைகள் நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகின்றன.

வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வீரர்கள் தரையிறங்குவதற்காக ஜூரோங்கில் உள்ள இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பக்கத்தில் உள்ள இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

COVID-19 நோய்ப்பரவல் சூழலில் சேவையாற்றும் முன்னிலை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சாகசம் அமையும்.

தரையிறங்கும் தருணத்தில் வட்டாரக் குடியிருப்பாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களின் ஆதரவை வெளிப்படுத்துவது மனத்தை நெகிழவைப்பதாக வீரர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்