பிரதமர் லீயின் தேசிய தினக் கூட்ட உரை... வரும் ஞாயிறன்று...
பிரதமர் லீ சியென் லூங் இவ்வாண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரையை இம்மாதம் 18ஆம் தேதியன்று நிகழ்த்துவார்.
பிரதமர் லீ சியென் லூங் இவ்வாண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரையை இம்மாதம் 18ஆம் தேதியன்று நிகழ்த்துவார்.
அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தேசிய தினக் கூட்ட உரை இடம்பெறும்.
மாலை 6.45 மணி முதல் மலாய், மாண்டரின் மொழிகளில் திரு லீ உரையாற்றுவார்.
பின் இரவு சுமார் 8.15 மணிக்கு அவரது ஆங்கில உரை தொடங்கும்.
மீடியாகார்ப் ஒளிவழிகள், வானொலி நிலையங்கள், இணையத்தளங்கள் ஆகியவற்றில் பிரதமரின் உரை நேரடியாக இடம்பெறும்.
மீடியகார்ப்பின் Toggle இணையத்தளம், பிரதமரின் Facebook பக்கம், ஆகியவற்றிலும் தேசிய தினக் கூட்ட உரையின் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.