Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீயின் தேசிய தினக் கூட்ட உரை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

பிரதமர் லீ சியென் லூங்கின் தேசிய தினக் கூட்ட உரை, வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங்கின் தேசிய தினக் கூட்ட உரை, வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அங் மோ கியோவில் அமைந்துள்ள தொழிற்கல்விக் கழகத்தில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில், அவர் மாலை ஆறே முக்கால் மணியளவில் மலாய், மண்டரின் ஆகிய மொழிகளில் முறையே உரையாற்றுவார்.

அவரது ஆங்கில உரை, இரவு 8.15 மணிக்குத் தொடங்கும்.

பிரதமரின் தேசிய தினக் கூட்ட உரை, அனைத்து உள்ளூர் ஒளிவழிகளிலும், வானொலி ஒலியலைகளிலும் நேரடியாக ஒளி-ஒலிபரப்படும்.

பிரதமரின் தேசிய தினக் கூட்ட உரையை, பொதுமக்கள் பிரதமர் அலுவலகத்தின் YouTube தளம், பிரதமர் லீயின் Facebook பக்கம், REACH அமைப்பின் Facebook பக்கம், toggle.sg, channelnewsasia.com ஆகிய இணையத் தளங்களிலும் நேரடியாகப் பார்க்கலாம்.

பிரதமர் லீ தமது தேசிய தினக் கூட்ட உரையை நிகழ்த்தும் வேளையில், அதுபற்றிய பொதுமக்களின் கருத்துகளை நேரடியாகக் கண்டறிய, பொதுமக்கள், பிரதமர் லீயின் Facebook மற்றும் Twitter பக்கங்களை நாடலாம்.

பிரதமர் லீயின் தேசிய தினக் கூட்ட உரை குறித்து கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோர் #ndrsg என்று குறியிடும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்