உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களிடம் திடீர்ச் சோதனை நடத்தப்படும்: NEA
உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களிடம் திடீர்ச் சோதனை நடத்தப்படும்-NEA
தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதிகாரிகள், உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் அமர்ந்து உண்ணும் வாடிக்கையாளர்களிடம் நாளை (13 அக்டோபர்) தொடங்கி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மட்டுமே அங்கு அமர்ந்து உண்ண முடியும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அத்தகைய சோதனை நடத்தப்படும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் உணவை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படுவர்.